Wednesday, 6 February 2019

முதல் டி -20 போட்டியில் நியூஸிலாந்திடம் சரணடைந்த இந்திய அணி

முதல் டி -20 போட்டியில்  நியூஸிலாந்திடம் சரணடைந்த இந்திய அணி

டி -20 போட்டி
         நியூஸிலாந்து சென்றுள்ள இந்தியா அணி டெஸ்ட், ஓடிஐ மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஓடிஐ போட்டிகளில் வெற்றி பெற்று சரித்திரம் படைத்த இந்தியா அணி இன்று(பிப்ரவரி 6) முதல் 20 ஓவர் போட்டியில் விளையாடியது

கோஹ்லி ஓய்வு 
         அடுத்து வரவிருக்கின்ற ஆஸ்திரேலியா தொடருக்கு தயாராகும் பொருட்டு இந்தியா கேப்டன் விராட் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது . அதனால் கேப்டன் பொறுப்பு ரோஹித் ஷர்மாவுக்கு வழங்கப்பட்டுள்ளது 

டாஸ் வென்ற இந்திய அணி 
      இந்தியா நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் 20 ஓவர் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சர்மா பௌலிங்கை தேர்வு செய்தார்

நியூஸிலாந்து விளாசல் 
       தொடக்கம் முதலே இந்திய பந்து வீச்சை சிதறடித்த நியூஸிலாந்து அணி வீரர்கள் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அந்த அணியின் தொடக்க வீரரான செய்பர்ட் 43 பந்துகளில் 84 ரன்கள் எடுக்க 20 ஓவர் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது

இந்திய அணி தோல்வி 
     கடின இலக்கை தூரத்திய இந்திய அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்து வந்தது. இதை அடுத்து 19.2 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணி சார்பாக அனுபவ வீரர் தோனி மட்டுமே அதிகபட்சமாக 39 ரன்கள் சேர்த்தார்